என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Graduate female suicide
நீங்கள் தேடியது "Graduate female suicide"
புதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
புதுக்கடையை அடுத்த ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டென்சன். இவரது மகள் டெர்பின் (வயது 23). பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று டென்சன் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் டெர்பின் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
டென்சன் வீடு திரும்பினார். அப்போது டெர்பின் அறை கதவு சாத்தப்பட்டு இருந்தது. நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் மின் விசிறியில் டெர்பின் தூக்கில் தொங்கினார். பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடையை அடுத்த ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டென்சன். இவரது மகள் டெர்பின் (வயது 23). பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று டென்சன் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் டெர்பின் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
டென்சன் வீடு திரும்பினார். அப்போது டெர்பின் அறை கதவு சாத்தப்பட்டு இருந்தது. நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் மின் விசிறியில் டெர்பின் தூக்கில் தொங்கினார். பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X