search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam scam"

    அண்ணா பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம்  விசாரணை நடத்தப்பட்டது.  

    அண்ணா பல்கலைக்கழகமும் தனியாக விசாரணை நடத்தி வந்தது. இதில் கடந்த 2017,2018ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு விடைத்தாள்களை மாற்றி வைத்ததாக  தற்காலிக பணியாளர்கள் மீது  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் தேர்வு முறைகேடு குறித்து அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 மண்டலங்களைச் சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  #AnnaUniversity #RevaluationScam

    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் கூறியதாவது-

    ஒரு அரசு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்ளை நிறைவேற்றி வருவதாகவும், மக்களுக்கு எது நன்மை என்பதை அறிந்து அவற்றை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் பச்சைப் பொய்.

    அதாவது, திராவிட கட்சிகள் மேடையில் பேசுவார்கள் ஜமுக்காலத்தில் வடி கட்டுன பொய் என்பார்கள். அந்த மாதிரி பச்சைப்பொய். அவர் பதவி ஏற்று 1½ வருடங்கள் ஆகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தையாவது அவரால் சொல்ல முடியுமா?.

    உண்மையில் பார்க்கும் போது, முன்னேறுவதற்கு பதிலாக தமிழகம் பின் நோக்கி செல்கிறது. எல்லா துறைகளிலும். ஆனால் ஒன்று மட்டும் முன்னேறி செல்கிறது. அது ஊழல். கடந்த ஆண்டில் மட்டும் மோட்டார் வாகனத்துறையில் தமிழகத்திற்கு வரவேண்டிய 25 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் போயிருக்கிறது. இதற்கு காரணம் ஊழல்.

    அதே மாதிரி கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி.வரி. இதில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநில பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் இருக்கிறது.

    இந்த 6 ஆண்டுகளில் 9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண் டும். ஆனால் 9 ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிடப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி பதவி காலத்தில் மட்டும் 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஊழல் தான் அதிகரித்துள்ளது. இவருடைய பதவி காலதத்தில் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல்.


    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 அதிகாரிகள் தேர்வில் ஊழல், மணல் கொள்ளையில் ஊழல், தாதுமணல் கொள்ளையில் ஊழல், மின்சார கொள்முதல் ஊழல், அரசுத்துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், மருத்துவக் காப்பீட்டில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

    இவருடைய ஆட்சியால் தான் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சிலர் வாய்கிழிய பேசுகிறார்கள். அவரது ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா? அல்லது ஊழலா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி தயாரா?

    2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். இதனால் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 3558 கோடி. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தான் அவர்கள் கொடுப்பார்கள். இவர்கள் அந்த பணத்தை தேர்தல் நடத்தாமலே கேட்டுப் பார்த்தார்கள். அவர்கள் முடியாது என்று விட்டனர்.

    உயர் நீதிமன்ற வழக்கில் இருக்கிறது என்கின்றனர். உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ஏன்? நடத்தவில்லை என்று கேட்கிறது. இதைவிட வேடிக்கை என்னவென்றால் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தெரிவிக்காவிட்டால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆகவே இதன் மூலமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிகிறது.

    ஏன் தேர்தலை நடத்த வில்லை என்றால் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைந்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரிகிறது. இதனால் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் இனி பிளஸ்-2 படித்தாலே வேலை கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். 80 லட்சம் பேர் பிளஸ்-2 படித்து முடித்தவர்கள், அதற்குமேல் படித்து முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். 1 கோடி பேர் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். இந்த 1½ வருடத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறார்? ஜெயலலிதா இருக்கும்போது இந்த கேள்வியை நாங்கள் கேட்டுக் கொண்டேதான் இருந்தோம். அரசு வேலையில் 5 லட்சம் காலியிடங்கள் பல வருடங்களாக இருக்கிறது. இப்போது எப்படியும் 10 லட்சம் காலிஇடம் இருக்கும். இதை அவர்கள் நிரப்பவே இல்லை.

    அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் குறித்து நான் அறிக்கை கொடுத்திருந்தேன். தமிழ்நாட் டில் 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைழக்கழகங்களுக்கு வேந்தர் கவர்னர் ஆவார். ஒரு பல்கலைக்கழகத்திற்கு மட்டும் வேந்தர் முதல்-அமைச்சர். அது இசைப்பல்கலைக்கழகம்.

    இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ததில் 1000 கோடிக்கு ஊழல் என்று சொல்லி இருந்தோம். இது குறித்து விரிவான விசாரணை வேண்டும் என சொல்லியிருந்தோம். பூதம் கிளம்புற மாதிரி, ஒரு ஊழல் அடங்குவதற்குள் மேலும் பல ஊழல்கள் வெளிவர தொடங்கி உள்ளன.

    ஒரு ஆண்டுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 லட்சம் விடைத்தாள்கள் மட்டும் தான் தேவை. ஆனால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு தேவையான 20 லட்சம் விடைத்தாள்களை கூடுதலாக அச்சடித் திருக்கிறார்கள். இதன் மூலமாக ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசைக்கும், எங்களுக்கும் இடையேயான பிரச்சினை முடிந்து விட்டது. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி மாதத்தில் முடிவு எடுப்போம். அன்புமணி பிரதமர் வேட்பாளர் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல், மாணவர்களை பணியில் சேர்த்த பல நிறுவனங்கள் கவலையில் உள்ளன.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தில் 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது, அதிக மார்க் வழங்கி முறைகேடு செய்ததாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு பணிகள் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    மார்க் சீட்டுகளை தயாரித்து கொடுப்பது, பல்கலைக்கழக பல்வேறு ஆவணங்களை தயாரித்து கொடுப்பது போன்றவற்றுக்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

    இதன்படி சென்னையை சேர்ந்த ‘மைஈசி டாக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா இருந்த போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    அப்போது பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜாராம் இருந்து வந்தார். இந்த ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    எனவே, இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு இப்போதைய துணைவேந்தர் சூரப்பா தனி விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.அந்த குழு ஒப்பந்தம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்து வருகிறது.

    ஒப்பந்தம் பல்கலைக்கழக விதிகளின்படி முறையாக செய்யப்பட்டதா? அதன் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டனவா? என விசாரணை குழு விசாரித்து வருகிறது.

    இது சம்பந்தமாக அந்த நிறுவனத்திடமும் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு நிறுவனம் அளித்த பதிலில் விசாரணை குழு திருப்தி அடையவில்லை.

    எனவே, தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்ற மாணவர்களை பணியில் சேர்த்துள்ள நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.

    அண்ணா பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்பு கல்லூரிகளிலும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறர்கள். அவர்களில் 58 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கிறது.

    மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்யும் போது, அண்ணா பல்கலைக்கழக மார்க்கையும் முக்கியமாக எடுத்து கொள்கிறார்கள்.

    அதில் எடுத்துள்ள மார்க் அடிப்படையில்தான் மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கின்றனர். குறிப்பாக மாணவர்களை தேர்வு செய்யும் போதே 60 சதவீதத்துக்கு மேல் மார்க் பெற்றவர்களைதான் பணி தேர்வுக்கு அழைக்கிறார்கள்.

    அதை விட குறைந்த மார்க் எடுத்து அல்லது தேர்ச்சி பெறாமலேயே முறைகேடு மூலமாக அதிக மார்க் எடுத்து பலர் பணி தேர்வுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அப்படிப்பட்ட மாணவர்களை கொண்டு நிறுவனங்கள் செயல்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

    எனவே, இதுபோன்ற மாணவர்கள் வேலையில் சேர்ந்திருப்பார்களோ என்று பல நிறுவனங்கள் கவலையில் உள்ளன.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் 75 சதவீத ஊழியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான பணிகளுக்கு தான்பயன்படுத்துகின்றன.

    வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும தரத்தை எதிர் பார்க்கும். அந்த தரம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று தொழில்துறை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் ஒரு நிர்வாகி கூறும் போது, பணிக்கு தேர்வு செய்யும் போது, பல்வேறு கட்ட ஆய்வுகளை நாங்கள் மேற்கொள்கிறோம். தவறாக மார்க் எடுத்த ஒரு நபர் வேலைக்கு சேர்ந்தாலோ அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டும். அப்போதுதான் அவர் வேலையில் தொடர முடி யும்.

    ஆனால், தவறான மாணவரை தேர்வு செய்து நாங்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் நிலையை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

    ×