search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disease attack"

    • 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
    • சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தென்னை, கரும்பு ,மக்காச்சோளம் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவு மாங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி , வாளவாடி, மானுப்பட்டி, சின்ன குமாரபாளையம் ,கொழுமம், கொங்குரார் குட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.

    மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் மாமரத்தில் பூ பிடித்து காய்க்கத் துவங்கும். இந்த ஆண்டு பூ பிடித்த நிலையில் நோய் தாக்குதல் காரணமாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும். ஆனால் தற்போது கொத்துக்கொத்தாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.சுமார் இரண்டு டன் பூக்கள் வரை உதிர்ந்துவிட்டன. இதனால் விளைச்சல் பாதித்து எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் .ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம் .ஆண்டுக்கு ஒரு முறை சீசன் காலங்களில் விளையும் மாங்காய் மூலம் தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. பூச்சி தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே காட்டு யானைகள் தொல்லை உள்ளது. மாமரத்தில் பிஞ்சு பிடித்த உடன் அதன் வாசத்தை மோப்பம் பிடித்து வரும் யானைகள் பிஞ்சுகளை பெருமளவுக்கு தின்று விடும். இந்த நிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பூ உதிர்ந்து வருவதுகவலை அளிக்கிறது. எனவே தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    • நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன் பப்பாளி விவசாயத்தை கள்ளிப்பூச்சி அதிக அளவில் தாக்கி அழித்தது.

    திருப்பூர்:

    பொங்கலூர் பகுதியில் பழத்திற்காகவும், பால் எடுப்பதற்காகவும் கணிசமான விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பப்பாளிக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வருகிறது.

    ஒரு கிலோ 11 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் பப்பாளியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து காய்ந்து வருகின்றன. நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

    இது குறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    சில ஆண்டுகளுக்கு முன் பப்பாளி விவசாயத்தை கள்ளிப்பூச்சி அதிக அளவில் தாக்கி அழித்தது. பின் படிப்படியாக நிலைமை சீரடைந்தது. கடந்த ஆண்டு சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்தன. இந்த சீசனில் ஓரளவு விலை கிடைக்கிறது.ஆனால் வைரஸ் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் நோய் முற்றிய செடிகள் வறண்டு விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வழி இன்றி தவித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×