search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhilip"

    • மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் திலீப்.
    • இவருக்கு சிறப்பு கௌரவம் கிடைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

    திலீப்

    திலீப்


    இந்நிலையில் ஐக்கிய அமீரகம் பிரபல மலையாள நடிகர் திலீப்க்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கோல்டன் விசா ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆளும் கட்சியினரின் தலையீட்டால் நடிகை பலாத்கார வழக்கை திசைதிருப்ப முயற்சிசெய்வதாக கேரள ஐகோர்ட்டில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கின் சாட்சிகளை கலைக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொச்சி கோர்ட்டில் நடந்து வரும் நடிகை பலாத்கார வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இன்னும் வழக்கு விசாரணை முடிவுக்கு வரவில்லை.

    இதற்கிடையே வழக்கு தொடர்பான தொடர் விசாரணை அறிக்கையை வருகிற 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை தற்போது கேரள ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் திலீப்புக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளது. அரசியல் தலையீடு காரணமாக வழக்கில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வழக்கின் சாட்சியங்களை கலைத்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் நடிகர் திலீப்பின் வக்கீல்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
     
    திலீப்
    திலீப்

    இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக இருந்த மெமரி கார்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை நீதிபதியின் நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மெமரி கார்டை சேதப்படுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை. எனவே எனக்கு நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே ஐகோர்ட்டு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள நடிகை தாக்கல் செய்துள்ள இந்த மனு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்த்தது குறித்து தலைவர் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். #Mohanlal #NadigarSangam
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. சங்க தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் இந்த கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டதால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் ரம்யா நம்பீசன், பாவனா, ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். அரசியல் கட்சியினரும் திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர் சங்கத்தில் மீண்டும் இணைய விரும்பவில்லை என்று திலீப் கூறியபிறகும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

    நடிகர் சங்க புதிய தலைவரான மோகன்லால் தற்போது படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். திலீப் விவகாரம் தொடர்பாக இதுவரை அவர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவந்தார். தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக மோகன்லால் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சங்கமான ‘அம்மா’ நடிகர், நடிகைகள் நலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்த சங்கத்தில் 485 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 137 பேர் நடிகைகளாகும். ஏராளமான நடிகர்கள் சொந்தமாக வீடு இல்லாமல் உள்ளனர். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நடிகர் சங்கம் செய்து வருகிறது.

    எங்கள் சங்கத்தை சேர்ந்த நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக செயல்பட்டும் அன்று முதல் இன்று வரை அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம். பெண்களுக்கு எதிராக நடிகர் சங்கம் ஒருபோதும் செயல்படவில்லை.

    தற்போது சிலரின் தூண்டுதல் காரணமாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. மேலும் நடிகர் சங்கத்தை ‘மாபியா’ போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்வது ஏன்? என்று தெரியவில்லை. நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்ப்பது என்பது சங்கத்தை சேர்ந்த பெரும்பான்மை யானவர்களின் விருப்பமாக இருந்ததால் அந்த தீர்மானம் கூட்டத்தில் கொண்டுவரப் பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக ராஜினாமா செய்துள்ள நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

    இது எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டது. இதில் வெளியில் உள்ள மற்றவர்கள் தலையிட என்ன தேவை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ×