search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor Sims Park"

    • 2-வது சீசனுக்காக தயாராகி வருகிறது குன்னூர் சிம்ஸ் பூங்கா.
    • சீசனுக்காக மலர் நாற்றுகள் நடப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இரண்டாம் சீசன் நடைபெறும். குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவுப் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி தொடங்கிவைத்தாா்.

    இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடப்பட உள்ளன.

    அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மலா் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.

    இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். 

    குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பல்வேறு விதமான இயற்கை கலந்த மூலிகை மலர்கள் பூத்து வருகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து, ரசித்து செல்கின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கவும், இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருவார்கள்.

    அவர்கள் பூங்காக்களில் உள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களையும், சாலையோரங்களில் பூத்து குலுங்கும் அரிய வகை மலர்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பல்வேறு விதமான இயற்கை கலந்த மூலிகை மலர்கள் பூத்து வருகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து, ரசித்து செல்கின்றனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இயற்கை கலந்த கண் கவரும் மலர்களும் பசுமை நிறைந்த புல் தரைகளும், வான் உயர்ந்த மரங்களும் மருத்துவ குணம் கொண்ட செடி கொடிகளும் உள்ளன. இதுதவிர 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய குறிஞ்சி மலரும் உள்ளது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குறிஞ்சி மலர் பூத்து குலுங்குகிறது.

    இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. சுற்றுலா பயணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்கா முழுவதும் உள்ள மலர் செடிகளையும், மூலிகை செடிகளையும் பார்த்து விட்டு, பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலரையும் கண்டு ரசிக்கின்றனர். பூவை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று செல்பி புகைப்படமும், குடும்பத்துடன் நின்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள்.
    ×