என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Chennai sand robbery
நீங்கள் தேடியது "Chennai sand robbery"
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரிகளில் சிலிக்கான் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு மற்றும் போலீசார் இன்று அதிகாலை ஊத்துக்கோட்டை 4 வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற் கிடமாக வந்த 3 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். லாரிகளில் சோதனை செய்தபோது, பீங்கான் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் சிலிக்கான் மணலை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து லாரியை ஓட்டி வந்த ஆந்திராவை சேர்ந்த சுப்பையா, நாகர் ஜூனா, ஜோதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து சென்னைக்கு சிலிக்கான் மணலை கடத்தி செல்வதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். மணல் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X