search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCCI Award"

    பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் முதன்முறையான வெளிநாட்டு வீரரான பீட்டர்சன் பட்டோடி நினைவு பேருரையை நிகழ்த்தினார். #BCCIAward
    கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் பிசிசிஐ விருதுகள் வழங்கி கவுரவிக்கும். இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.

    இந்த விழாவின்போது எம்ஏகே பட்டோடி நினைவு பேருரை நிகழ்த்தப்படும். கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்தான் பேருரை நிகழ்த்தினார். இந்த முறை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் பேரை நிகழ்த்தினார்.



    இதன்மூலம் பட்டோடி நினைவு பேருரையை நிழ்த்திய வெளிநாட்டு நபர் என்ற பெருமையை பீட்டர்சன் பெற்றுள்ளார். பீட்டர்சன் உரை நிகழ்த்துவார் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பெரும்பாலானா பிசிசிஐ அதிகார்கள் அதிப்தி தெரிவித்திருந்தனர். என்றாலும், பட்டோடி நினைவு பேருரையை நிகழ்த்தியது எனக்கு பெருமை என்று பீட்டர்சன் கூறினார்.
    ×