search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashokbabu MLA"

    • நோயாளிகளிடம் குறை கேட்டார்
    • மருத்துவ மனை புதுவை ஜவகர் நகர் 5-வது குறுக்கு வீதியில் ஒரு வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பஸ் நிலையம் பின்புறம் மங்க லட்சுமி நகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஹோமி யோபதி மருத்துவமனை இயங்கி வந்தது.

    தற்போது இந்த மருத்துவ மனை புதுவை ஜவகர் நகர் 5-வது குறுக்கு வீதியில் ஒரு வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

    இந்த மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு ஹோமியோபதி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் அசோக் பாபு எம்.எல்.ஏ. குறை கேட்டார். அவர்கள் ஹோமி யோபதி மருத்துவமனைக்கு வர போக்குவரத்து வசதி யில்லை. மேலும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குைற உள்ளது.

    போதுமான மருந்துகளும் இல்லை என்று அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அசோக்பாபு எம்.எல்.ஏ. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.

    • அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கினர்
    • புத்தகம் ஜான்பால் நகரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப் பட்டது. மேலும் வீடு தோறும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

    புதுச்சேரி:

    பாரத பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி புதுவையில் பா.ஜனதா சார்பில் வீடு வீடாக சென்று சாதனை விளக்க புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதுபோல் முதலி யார்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பிலும் வீடு வீடாக மோடி அரசின் சாதனை விளக்க புத்தகம் ஜான்பால் நகரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப் பட்டது. மேலும் வீடு தோறும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் கார்த்திகேயன், கணேசன், தில்லை கோவிந்தன், லட்சுமி, அன்பரசி, மஞ்சுளா, ரஞ்சித், பார்த்தீபன், ரத்தின சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை முதலியார்பேட்டை தொகுதிகுட்பட்ட நைனார்மண்டபம் சுதானாநகரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம். இவரது மகள் பூங்குழலி. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர் பரத கலையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.
    • பரதகலை மாணவி பூங்குழலிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை தொகுதிகுட்பட்ட நைனார்மண்டபம் சுதானாநகரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம். இவரது மகள் பூங்குழலி. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர் பரத கலையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.

    இந்தநிலையில் பரத கலையில் தனிநபர் திறமையில் மாற்றுத்திறனாளி களுக்கான மத்திய அரசின் தேசிய விருதுக்கு பூங்குழலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பூங்குழலி தனது பெற்றோருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    பரதகலை மாணவி பூங்குழலிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியின் போது முத்தமிழன், பா.ஜனதா நகர மாவட்ட துணை தலைவர் குமார், விஜயரங்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யனாரப்பன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துங்கள் என்று அசோக் பாபு எம்.எல்.ஏ.விடம் பாஜனதா அமைப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.
    • அப்போது புதுவை அரசியல் நிலவரம், பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து சந்தோஷ் கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துங்கள் என்று அசோக் பாபு எம்.எல்.ஏ.விடம் பாஜனதா அமைப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக் பாபு டெல்லி சென்றுள்ளார். அங்கு, அவர் பா.ஜனதா அமைப்பு செயலாளர் சந்தோஷை, அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது புதுவை அரசியல் நிலவரம், பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து சந்தோஷ் கேட்டறிந்தார்.

    மேலும், புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துமாறு அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் சந்தோஷ் அறிவுறுத்தினார்.

    ×