என் மலர்
நீங்கள் தேடியது "Aam Aadmi Party"
- 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்.
- ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இல்லாமல் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
டெல்லி:
டெல்லி சட்டசபையின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்.
டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் கூறி சி.பி.ஐ. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. சி.பி.ஐ. நடவடிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் தான் வகித்து வந்த துறை முதல்-மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். மேலும் மந்திரிசபையில் அங்கம் வகித்து வந்த சத்யேந்திர ஜெயின் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து வந்த இலாகா மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது.
இதனால் சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்தார். இந்த நிலையில் இருவரின் ராஜினாமாவையடுத்து மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள் ஆம் ஆத்மியை சேர்ந்த வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் மற்றும் சமூக நலத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இல்லாமல் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
புதிதாக ஒதுக்கப்பட்ட துறைகளை பொறுப்பேற்ற ஆம் ஆத்மி மந்திரி கைலாஷ் கெலாட் இந்த முறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவருக்கு நிதி, திட்டமிடல், பொதுப்பணி, மின்சாரம், உள்துறை, நகர்ப்புற மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, மற்றும் நீர் துறைகள் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
- மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
- ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகர ராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் நேற்று மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது.
பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை. அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அறிவித்தனர்.
இரவு முழுக்க அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டார். இரவு உணவும் அவருக்கு அங்கேயே வழங்கப்பட்டது. இன்று காலை அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.
இதையடுத்து மணீஷ் சிசோடியா மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை இன்று பிற்பகல் சி.பி.ஐ. கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.
மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று பிற்பகல் அவர்கள் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். எனவே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்த எத்தனை நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது இன்று பிற்பகல் தெரியும்.
மணீஷ் சிசோடியா மதுபானக்கொள்கையில் திருத்தம் செய்து பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தகவல்கள், செல்போன் உரையாடல் பதிவுகள், இ-மெயில்கள் மற்றும் செயலாளர் அரவிந்த் வாக்குமூலம் ஆகியவை மணீஷ் சிசோடியா ஊழல் செய்ததற்கு ஆதாரங்களாக உள்ளன என்று சிபி.ஐ. தெரிவித்துள்ளது.
மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சி.பி.ஐ. அலுவலகம் முன்பும், பா.ஜ.க. அலுவலகம் முன்பும் ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் போராட்டம் நடத்த பா.ஜ.க. தொண்டர்களும் குவிந்தனர்.
இதனால் டெல்லியின் பல பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அலுவலகம், பா.ஜ.க. அலுவலகம் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பெரும்பான்மையை தாண்டி 130 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி.
- உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாக மணீஷ் சிசோடியா கருத்து
டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக 99 வார்டுகளில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் தொகுதியில் ஷகீலா பேகம் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார்.
- ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களும் கோபத்தில் உள்ளனர்.
- ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி :
டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வது தொடர் கதையாகி உள்ளது.
இந்த நிலையில் டெல்லி வட கிழக்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மனோஜ் திவாரி நேற்றுமுன்தினம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அந்தப் பதிவில் அவர், "நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறேன். ஏனென்றால், அந்தக் கட்சியின் தொடர் ஊழலாலும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அந்தக் கட்சி டிக்கெட்டுகளை விற்றதாலும், சிறையில் கற்பழிப்பு குற்றவாளியுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் நட்பாலும், சிறையில் மசாஜ் செய்யப்பட்டுள்ளதாலும் மக்களும், ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது டெல்லி முதல்-மந்திரிக்கு நடந்து விடக்கூடாது" என கூறி உள்ளார்.
இந்தப் பதிவைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜ.க. சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியது அதிர வைப்பதாக அமைந்தது.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதை பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி பேச்சு மொழி காட்டிக்கொடுக்கிறது. இந்த மிரட்டலுக்காக மனோஜ் திவாரியை கைது செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
குஜராத் சட்டசபை தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி செய்கின்றனர். இதில் டெல்லி எம்.பி. மனோஜ் திவாரிக்கு தொடர்பு இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் தேர்தல் கமிஷனில் புகார் செய்வோம்.
ஆனால் இப்படிப்பட்ட அற்பமான அரசியல் கண்டு ஆம் ஆத்மி கட்சி பயப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். ஆனால் மணிஷ் சிசோடியா, கெஜ்ரிவாலைக் கொல்ல பா.ஜ.க. சதி செய்கிறது என்ற பழைய பல்லவியைத்தான் மீண்டும் பாடுகிறார். கெஜ்ரிவால் கொல்லப்படுவார் என சிசோடியா தீர்க்கதரிசனம் சொல்கிறபோது, மணிஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என கெஜ்ரிவால் சொல்கிறார். என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரிய வில்லை" என கூறினார்.
- டெல்லியில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர்.
- அதில் பங்கேற்ற மந்திரி ராஜேந்திர பால் கவுதமை பதவி நீக்கம் செய்யுமாறு பா.ஜ.க. கோரியது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர், கவுதமை பதவி நீக்கம் செய்யுமாறு கோரினர். மேலும், வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் 'திரங்கா பேரணி'க்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க.விடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இன்று மகரிஷி வால்மீகிஜி யின் வெளிப்பாடு நாள் மற்றும் மான்யவர் கன்ஷி ராம் சாஹேப் அவர்களின் நினைவு நாள். அப்படியொரு நாளில் தற்செயலாக இன்று நான் பல தடைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். இன்று நான் மீண்டும் பிறந்துள்ளேன். இப்போது நான் இன்னும் உறுதியாக, சமூகத்தின் மீதான உரிமைகளுக்காக மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக எந்த தடையுமின்றி உறுதியாக தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார்.
- மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளது.
- பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவரும், மாநில செய்தி தொடா்பாளருமான எஸ்.சுந்தரபாண்டியன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வீடுகளுக்கு வசூலிக்கப்பட்ட மின் கட்டணத்தை கணிசமாக உயா்த்தியுள்ளதால் ஏழை, எளியோா் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.இது குறித்து பொதுமக்களிடம் பெயரளவுக்கு மட்டும் கருத்துக் கேட்கப்பட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழலில் சாமானிய மக்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.ஆகவே தமிழக அரசு மின் கட்டண உயா்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்வதுடன், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
- ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.
புதுடெல்லி :
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.
இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி விரும்பியது.

இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் சார்பில் சில மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். பஞ்சாப், அரியானா உள்பட மேலும் சில மாநிலங்களிலும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை அந்த தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து ஆம்ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுடெல்லி மற்றும் சாந்தினிசவுக் உள்பட 3 தொகுதிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க இயலும் ஆம்ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளை மட்டுமே ஆம்ஆத்மிக்கு கொடுக்க பேச்சு நடந்து வருகிறது. ஆனால் இதை ஆம்ஆத்மி ஏற்குமா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையே டெல்லியில் காங்கிரசும், ஆம்ஆத்மியும் தலா 3 தொகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரசுக்கு கொடுக்க புதிய சமரச திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசும், ஆம்ஆத்மியும் ஆலோசித்து வருகின்றன.
டெல்லியில் மே மாதம் 12-ந்தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாதம் இறுதி வரை பேச்சு நடத்தி தொகுதி உடன்பாடு செய்து கொள்ள அவகாசம் இருக்கிறது.
இதனால் இரு கட்சி தலைவர்களும் நிதானமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் உள்ள பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் காங்கிரசின் திட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆம்ஆத்மியுடன் சேர்ந்தால் நல்லதா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் சக்தி செயலியை பயன்படுத்தி தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் முடிவுக்கு ஏற்ப ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி தீர்மானிக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். #ParliamentElection #RahulGandhi #AamAadmi

லக்னோ:
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.
இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:-

கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம்.
பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம். உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #AamAadmi #Kejriwal