search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 year old girls molested"

    ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கூடம் நடத்துவதாக கூறி அதன் உரிமையாளரே 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நகரி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள கிளவ் பேட்டை என்ற இடத்தில் பள்ளிக்கூடம் நடத்துபவர் ஜோசப்.

    இவர், தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக தங்கும் விடுதி நடத்தி வந்தார். இதில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள ஏழை மாணவிகள் தங்கி இருந்தனர்.

    2-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளி நிர்வாகி ஜோசப், இந்த மாணவிகளை தனது பாலியல் பசிக்கு பயன்படுத்திக் கொண்டது தெரிய வந்தது.

    இந்த விடுதியில் மொத்தம் 46 மாணவிகள் இருந்தனர். அவர்களை தினமும் 6 பேர் வீதம் தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு மாணவிகளை எழுந்து வர வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது உறுதியானது.

    இதையடுத்து பள்ளி நிர்வாகி ஜோசப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மதபோதகராக இருந்ததும் தெரிய வந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் கைதான இவர் மீது 2 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளிக்கூடம் நடத்துவதாக கூறி அதன் உரிமையாளரே 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பள்ளி நிர்வாகி நடத்தி வந்த தங்கும் விடுதியில் இருந்த 46 மாணவிகளும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீண்ட நாட்களாக இது போன்ற பாலியல் தொல்லை நடந்துள்ளது. இதை வெளியே சொன்னால் தங்கள் படிப்பு நின்று விடுமோ என்ற பயத்தில் மாணவிகள் இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஒரு மாணவி துணிச்சலுடன் போலீசாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகி ஜோசப்பை கைது செய்துள்ளனர்.
    ×