search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two-wheeler rally"

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
    • பேரணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர்.

    உடுமலை:

    தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் 17-ந் தேதி சேலத்தில் இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    அந்த பேரணி உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தது. பேரணியை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி, ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பேரணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பேரணி உடுமலையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் புறப்பட்டு சென்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், நகர மன்ற தலைவர் மு.மத்தீன், நகர துணை செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், எம்.ஆர்.பாபு, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.எம். தங்கராஜ் என்கிற எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி க.செந்தில்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பா.விக்ரம் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×