என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் வன்முறை"
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநில மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசின் துணையோடு தொடர்ந்து முறைகேடு நடந்து வருகிறது. கடந்த 17-ந்தேதி முதுநிலை பட்டப்படிப்பிற்கான கவுன்சிலிங் நடந்தது.
முதுநிலை படிப்பிற்கு ரூ.20 லட்சத்து 34 ஆயிரம் கட்டணமாக குழு நிர்ணயித்திருந்தது. இதில் புதுவை மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அதன் பிறகே அகில இந்திய கோட்டாவில் மாணவர்களை நிரப்பினர்.
ஆனால் புதுவையில் சுகாதரத்துறை செயலாளர் கவர்னரிடம் தவறான தகவல்களை எடுத்துக்கூறி கவுன் சிலிங்கை நடத்தி முடித்துள்ளார். மண்ணாடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் திடீரென கல்லூரியில் சேர இயலாது என கடிதம் அளித்து விட்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக 2 மாணவர்களை முதுநிலை படிப்பில் சேர்த்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த அந்த மாணவர்கள் அதிகளவில் பணம் தருவோம் என்று சொன்னதால் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக கவர்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையின்மூலம் பல உண்மைகள் வெளிவரும்.
கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்காமல் தேர்தலை நடத்துவது தவறான அணுகு முறை. 30 பேர் உறுப்பினராக இருக்கக்கூடிய சங்கத்திற்கு 9 இயக்குனர்களை தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் கடைசியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இளங்கோ நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்த்த பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்.
புதுவையில் சில இடங்களில் கட்டண பார்க்கிங் முறையை அமல்படுத்த உள்ளாட்சித்துறை முடிவு செய்துள்ளது.
கடலூர் சாலை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இங்கு உள்ளாட்சித்துறை கட்டண பார்க்கிங்கிற்கு ஏலம் விட்டுள்ளது. பொதுப் பணித்துறையின் எந்த அனுமதியும் பெறாமல் ஏலம் விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நகர பகுதியில் பல வணிக நிறுவனங்கள் பார்க்கிங் இல்லாமல் கட்டிடம் கட்டியுள்ளனர்.
இதை அரசு கண்டும், காணாமலும் உள்ளது. இனியாவது புதுவை நகர குழுமம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை பார்க்கிங் வசதி இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பார்க்கிங் வசதி செய்ய உத்தரவிட வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்தின் பல்வேறு கருத்துகள் அ.தி. மு.க.வுக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஸ்டைர்லைட் வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை வரவேற்கிறோம். அவரின் கருத்து 100 சதவீதம் ஏற்புடையது. அம்மா இருந்திருந்தால் இதுபோன்ற வன்முறைகள் நடைபெற சாத்தியமே இல்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தீர்வாகாது. இதை புதுவையில் உள்ள ஆளும் கட்சியும், நாராயணசாமியும் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்