search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்"

    • பனமா பேப்பர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கட்சி தலைவர் பதவியை இழந்தார்.
    • நான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில், பொதுத்தேர்தலுக்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    பின்னர் இங்கிலாந்து சென்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பினார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் நவாஸ் ஷெரீப் கட்சி பொனாசீர் பூட்டோவின் மகன் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நவாஸ் ஷெரீப் சகோதரர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் நவாஸ் ஷெரீப்பை தவிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.
    • வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் மறுத்தேர்தல்.

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களுக்கான உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், இம்ரான் கான் கட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்தது. இதன்தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    அதனடிப்படையில் 21 பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களின் உறுப்பினர் இடங்களுக்கு நேற்று மறுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.-என்), பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாம் ஆதரவு பெற்ற சன்னி இட்டேஹாத் கவுன்சில் (எஸ்ஐசி), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

    தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் தனியார் மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

    அதனடிப்படையில் நவாஸ் ஷெரீப் கட்சி இரண்டு தேசிய உறுப்பினர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் மக்கள் கட்சி, சன்னி இட்டேஹாத் கவுன்சில் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்ற ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார்.

    மாகாணங்களுக்கான உறுப்பினரில் 16 இடங்களில் 10 இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி பெற்றி பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் மக்கள் கட்சி, எஸ்ஐசி, இஸ்டெகாம் பாகிஸ்தான் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பலுசிஸ்தான் தேசிய கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்றவர்களில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

    இடைத்தேர்தலின்போது ஆங்காங்கே சிறிய வன்முறைகள் ஏற்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் பிடிஐ கட்சி வாக்காளர்களுடன் நடைபெற்ற மோதலின்போது நவாஸ் ஷெரீப் கட்சி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். இருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழங்கு கட்டுக்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

    தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு காரணமாக பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தானில் இணையதளங்கள் முடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×