என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூரமங்கலம் கொள்ளை"
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றார். அவரது மனைவி வளர்மதி நேற்று வீட்டை பூட்டி விட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.25ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
வீட்டிற்குள் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #Robberycase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்