என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலை விபத்து"
- பிலிப்பைன்சில் பிக் அப் டிரக் மீது பயணிகள் பஸ் மோதியது.
- இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகரிக்கும் விதிமீறல்கள் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்களால் சாலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்நிலையில், வடக்கு பிலிப்பைன்ஸில் பிக் அப் டிரக் மீது பயணிகள் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து ககாயன் மாகாணத்தில் உள்ள அபுலுக் நகராட்சியில் உள்ள சந்திப்பில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில், பயணிகள் பஸ்சில் எந்த உயிரிழப்பும் இல்லை. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் படுகாயம் அடைந்தனர். பயணிகளில் 23 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகம்.
- உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்து.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கார்கள் பள்ளத்தாக்குகளில் விழுந்து மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில், ஒரு விபத்து கிர்சு சௌபட்டா என்கிற பகுதியிலும், மற்றொன்று சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகேயும் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து (SDRF) பெறப்பட்ட தகவலை மேற்கோள் காட்டி, "கிர்சு சௌபட்டாவில் கார் சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், விபத்துகான காரணம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து பணியாளர்கள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் ஸ்ரீஷ்டி நேகி (15), ஆருஷி (9), சௌமியா (5) மற்றும் டிரைவர் மன்வர் சிங் என்ற சோனு என அடையாளம் காணப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஸ்ரீஷ்டியின் சகோதரி சாக்ஷி நேகி (14), சமீக்ஷா ராவத் (15) மற்றும் கன்ஹா (11) ஆகியோர் அடங்குவர்.
சாக்ஷியும், சமீக்ஷாவும் சிறப்பு சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவத்தில், சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகே கார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சத்புலிக்கு சென்று கொண்டிருந்தனன் என்பது தெரியவந்தது.
- சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது.
- விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஆட்டோ மீது பைக் ஒன்று வேகமாக மோதியது. இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் சுழன்றடித்தது.
இதனால், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்," ஆட்டோ ஒன்று யு டர்ன் எடுக்க முயல்கிறது. அப்போது அந்த வழியாக வந்த பைக் ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து ஓட்டுனர் இல்லாமலேயே வேகமாக சுற்றி தாறுமாறாக ஓடியது. இதில், பொது மக்கள் மீது மோதி கீழே விழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
- 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதி.
- விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
- தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பெருந்துறை:
ஈரோடு மாமரத்துபாளையம் அருகே கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (46). கூலித் தொழிலாளியான துளசிமணிக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் துளசிமணி கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துளசிமணியை பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 21-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து துளசி மணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உடல் உறுப்புகளை பெறுவதற்காக காத்திருந்த உறுப்பு மாற்ற ஆணையத்தின் விதிமுறைப்படி 21-ந் தேதி மாலையில் துளசிமணியின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து துளசிமணியின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் தோல் ஆகியவை பாதுகாப்பாக எடுக்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தானம் பெறுவதற்காக காத்திருந்த ஒருவருக்கும், 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவருக்கும், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளிக்கும் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. அதேபோல தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் வழங்கிய துளசிமணியின் குடும்பத்தாருக்கு அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வள்ளி சத்யமூர்த்தி நன்றி தெரிவித்ததுடன் துளசி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்படுவது 9-வது முறை என மருத்துவக் கல்லூரி சேகர் தெரிவித்தார்.
- கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழப்பு.
- கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்பு.
டெல்லியில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்புகள் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை-24, என்எச்-8, ரிங் ரோடு, ரோஹ்தக் சாலை, ஜிடி சாலை மற்றும் மதுரா சாலை போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் நிகழ்ந்த டெல்லியின் முதல் பத்து சாலைகளில் ஒன்றாகும்.
இந்த ஆய்வு தகவலின் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இலக்கு அமலாக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும், இறுதியில் இந்த சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து பல கல்வித் திட்டங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு கற்பிக்க ராஹ்கிரி போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன," என்று அதிகாரி கூறினார்.
- திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சென்னை:
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது.
அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Tamil Nadu: Four people died and more than 15 were injured after a bus collided with a lorry in Maduranthakam on the Chennai-Trichy National Highway as it lost control while trying to overtake. The injured have been taken to Chengalpattu Government Hospital. More details… pic.twitter.com/J7S4W4NXQv
— ANI (@ANI) May 16, 2024
- லாரி மீது மோதிய விபத்தில் பஸ் தீப்பிடித்தது.
- இந்த விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.
பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது.
தீ மளமளவென பரவியதால் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், வாக்களித்து விட்டு திரும்புகையில் விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது.
- கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து.
- 53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.
அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆர்லாண்டோவின் வடக்கே உள்ள மரியன் மாகாணத்தில் ஒரு டிரக் மீது பேருந்து மோதியதாக புளோரிடா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
தர்பூசணிகளை அறுவடை செய்து வரும் டுனெல்லனில் உள்ள கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பண்ணை மூடப்படுவதாக கேனான் பண்ணை அறிவித்துள்ளது.
- விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்ததும் பேருந்து ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜகார்தா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் பயணம் செய்தனர்.
மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/13/2213023-bus1.webp)
இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேர் உயிர் இழந்தனர். பலியானவர்களில் 9 பேர் மாணவர்கள், ஒரு ஆசிரியர், மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
- விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த பேருந்தில் மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர். இதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து 12 பேரை அவசர உதவியாளர்கள் மீட்டுள்ளனர். மீட்பு பணி முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கிய வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதின.
- இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சத்தியமங்கலம்:
கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பம், குடும்பமாக சுற்றுலா தலம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவ்வாறு குடும்பத்துடன் செல்லும்போது சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இதேபோன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், நெசவாளர் காலனி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு:
கரூர் மாவட்டத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, அவர்களது மகன் அபிஷேக் (8), மகள் நித்திஷா (7) ஆகியோர் சென்றனர். முருகன் கரூரில் ஏற்றுமதி தொழில் செய்துவந்தார். காரை முருகன் ஓட்டிவர மனைவி, மகன், மகள் உடன் வந்து கொண்டிருந்தனர்.
இதேபோல் பவானிசாகருக்கு சுற்றுலா வந்த சேலத்தைச் சேர்ந்த மோகன், சுஜித் விஷால், பத்ரி ஆகிய 3 பேர் பவானிசாகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் சேலம் நோக்கி தங்களது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் நெசவாளர் காலனி அருகே 2 கார்களும் வந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் 2 கார்களும் தலைகீழாக கவிழ்ந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் மோகன் ஓட்டி வந்த மாருதி 800 கார் பலத்த சேதமடைந்து அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்தில் பலத்த அடிபட்ட முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக், மகள் நித்திஷா ஆகியோர் உயிருக்கு போராடி துடித்தனர். விபத்து நடந்ததும் அந்த பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கும், பவா னிசாகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு வந்தனர். அப்போது விபத்தில் முருகன் அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. மகள் நித்திஷா வயிற்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.
அதேசமயம் எதிர் தர ப்பில் இருந்து காரில் வந்த மோகன், சுஜித் விஷால், பத்ரி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் உயிருக்கு போராடிய மகள் நித்திஷாவை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் நித்திஷா வரும் வழியிலேயே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணி க்கை 4 ஆக உயர்ந்தது. விபத்தில் காயம் அடைந்த மோகன், சுஜித் விஷால், பத்ரி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் நடந்த இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)