என் மலர்
நீங்கள் தேடியது "சசிகலா"
- தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
- சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலை தொங்கி காட்சியளித்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில்,
* 2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர்.
* தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
* தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கும்.
* நாட்டை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவும் தேசிய அளவிலான கட்சி.
* கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் விஜய்.
* நாட்டில் என்ன நடக்கிறது என்றே த.வெ.க. தலைவர் விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும்.
* ஒரு கட்சியின் தலைவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திருக்க வேண்டும்.
* அ.தி.மு.க. ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும்?
* விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை.
* விஜய் நேரில் செய்தியாளர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியும்.
* ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார்.
* சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை.
* சசிகலா விவகாரம் குறித்து ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்தி விட்டேன்.
* ஜெயலலிதாவின் ஆன்மா துரத்தியதால் தான் மனோஜ் பாண்டியன் தி.மு.க.விற்கு சென்று விட்டார்.
* எங்கள் மீது குறை கூற ஒன்றும் இல்லை, எந்த தவறும் செய்யாத அதிமுக மீது குறைகளை முதல்வர் தேடிக்கொண்டிருக்கிறார்.
* பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் என மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
- எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
- ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
இது தொடர்பாகவும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்க போகிறீர்களா? என்பது பற்றி நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
இதனிடையே அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.
- 3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
- நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
நான்கரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் சென்றடையவில்லை. இதனை பெண்கள் புரிந்து கொண்டு உள்ளனர். மகளிருக்கு ரூபாய் 1000 கொடுத்துவிட்டு டாஸ்மாக், மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ரூ. 5 ஆயிரம் செலவு செய்யக்கூடிய குடும்பம் தற்போது ரூ.10 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
தி.மு.க. அளிக்கும் ரூ.1000 சென்று சேரும்பொழுது நாங்கள் கொடுக்கும் ரூ.2000 சென்று சேராதா? சென்ற தேர்தலில் ரூ.1500 அறிவித்து அது மக்களிடம் சென்று சேரவில்லை அதனால் தற்போது அறிவித்துள்ளார். கட்டாயம் இல்லங்களுக்கு சென்று சேரும்.
ஆளும் கட்சியாக தி.மு.க. உள்ளது. யாரை உருட்டுவது, மிரட்டுவது. எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. பா.ஜ.க.வுடன் ஏற்கனவே இருந்த கூட்டணி தான், டி.டி.வி. அவருடன் தான் இருந்தார். தற்போது வந்துள்ளார். பொய்யான தகவலை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.
நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மக்களிடம் வரவேற்பும் உள்ளது. ஆளுங்கட்சியிடம் பணம் உள்ளது. பல தவறான வழிகளில் இருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது.
ஓய்வூதியம் என்று அறிவித்திருப்பது ஊதியத்தின் 10 சதவீதம் பிடித்தம் செய்து பின்பு கொடுப்பது. அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவில்லை. தி.மு.க.வில் உள்ள சிலர் இனிப்பு வழங்கி வெற்றி பெற்றதாக தெரிவித்து வருகின்றனர். இன்று வரை இடைநிலை ஆசிரியர் போராடி வருகின்றனர். இப்படி இருக்க எப்படி வெற்றியடையும்.
கஞ்சா விற்பவர்களை காவல்துறை பிடித்தால் உடனடியாக அமைச்சர் பேசுகிறார். அனைவருக்கும் பங்கு செல்வதால் யாரும் கண்டு கொள்வதில்லை.
காவல்துறையினரே கஞ்சா விற்பனை செய்தார் என செய்தி வருகிறது. அரசாங்கமும் காவல்துறையும் கூட்டாக செயல்படுகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலம் என சான்றிதழ் பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு எங்கு உள்ளது. கனிமொழி பங்கேற்ற கூட்டத்திலேயே பாதுகாப்பு இல்லை.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். அதிகாரப்பூர்வமாக விரைவில் செய்தி வெளிவரும். லாட்டரி வியாபாரி மார்ட்டின் மருமகனை அருகில் வைத்துக் கொண்டு விஜய் ஊழலை ஒழிப்பதாக பேசி வருகிறார். லஞ்சம் வாங்க மாட்டேன் என அவர் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணம் தினகரன், சசிகலாவிடம் இருப்பதாக பேசிய பேச்சுகள் உண்மை. அவர்கள் பேசியதும் உண்மை. தற்போது இணைந்து விட்டதால் எல்லாம் முடிந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ள நிலையில் திண்டுக்கல் சி.சீனிவாசனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
- திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார். இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வைத்திலிங்கம் இணைந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சசிசலா கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.
இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு சிலரின் சுயநலத்தால் நடக்கிறது.
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை.
- மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாகவும், எங்கள் கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதாகவும் என்னிடம் நிருபர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்புவார்கள்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் இணைந்திருந்தார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் கூட, இப்போது நாட்டு மக்களின் நலன் கருதி பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்திருக்கிறது.
கடந்த வாரம் பா.ம.க. தலைவர் அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்திருக்கிறார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்.
இப்போது எங்கள் கூட்டணி மக்களின் நன்மை கருதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் வந்து சேரும். அதன் பிறகு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையான வகையில் ஆட்சி அமைக்கும்.
கேள்வி: சசிகலா நடத்திய கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் ஆதரவு தந்தாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். நாட்டு மக்களின் நலன் கருதி யார் ஆதரவு தந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
கேள்வி: பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது?
பதில்: பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் இந்த முறை வருவது என்பது மிக மிக வித்தியாசமான ஒரு சூழ்நிலை. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பிரதமர் மோடி மீதும் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மீதும் அக்கறை கொண்டு ஆதரவு தருகிறார்கள். பிரதமர் வருகையின்போது 5 லட்சம் பேருக்கும் மேல் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மதுராந்தகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த கூட்டம் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும்.
கேள்வி: உங்கள் கூட்டணிக்கு டி.டி.வி. தினகரன் வருவாரா?
பதில்: அதுபற்றி நான் இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. 23-ந்தேதி மேடையில் யார், யார் இருக்கிறார்கள்? என்று நீங்கள் பார்க்கலாம்.
கேள்வி: பிரதமர் வந்த பிறகுதான் கூட்டணி முடிவாகுமா?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள். பா.ஜ.க. அகில இந்திய தலைவராக 45 வயது இளைஞர் பீகார் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதுதான் பா.ஜ.க.வின் சுதந்திரம். அவர் செயல் தலைவராக இருக்கும் போதே திருவனந்தபுரத்தில் மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறோம். மகாராஷ்டிரத்தில் 5 மாநகராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம். அதன் பிறகு தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநில தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்.
இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவில், சசிகலா முதல் செங்கோட்டையன் வரை பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்த சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கே.சி.பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
- துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல என்று கூறினார்.
மேலும் டி.டி.வி. தினகரன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
* கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டதால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.
* கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் வேட்பாளர் பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து வாங்கச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.
* அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல. சசிகலா கூறியதால் தான் 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
* ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.
* அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக முடியவில்லை.
* எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
* பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
* துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என இதுவரை அமித்ஷா குறிப்பிடவில்லை.
* நீங்கள் விரும்புபவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அமித்ஷா எங்களிடம் கூறியிருந்தார்.
* டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறிமாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.
* அதிமுகவிற்கு தற்போது உள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது.
* 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு நாங்கள் காரணமில்லை. அவர்தான் காரணம்.
* தன்மானம் தான் முக்கியம் என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றது ஏன்?
* எடப்பாடி பழனிசாமியை தாக்கிப்பேசினால் அவரால் தாங்க முடியாது என்று கூறினார்.
- விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில்.
- 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது.
திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.
தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்," சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது என்றார்.
இதுகுறித்து மேலும் கூறிய அமைச்சர் மூர்த்தி,"கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாகாது. 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது" என்றார்.
- செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
- திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதிமுக மூத்த முன்னோடியும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் மீதான நடவடிக்கை அறிவார்ந்த செயலாகாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா மேலும் கூறியதாவது:-
செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல், இது அதிமுக கட்சி நலனுக்கு உகந்தது அல்ல.
மீண்டும் அதிமுகு ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் தர போகிறோம்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சோமசுந்தரத்தை சமாதானப்படுத்தி கட்சிக்கு அழைத்துவர முயற்சித்தவர் ஜெயலலிதா.
திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் காஞ்சிபுரம் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சர்க்கரை ஆலையின் வங்கி கணக்குகள் மற்றும் ஆலையின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதும் அதில் சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகுதான் சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2019-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சசிகலா வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர். ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியது தொடர்பாக உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது.
- திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
சென்னை:
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்".
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதரர் செங்கோட்டையனைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செறுக்கோடும் மிளிரும்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!
நாளை நமதே! வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி
வணக்கம்.
- திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அ.தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கே.ஏ. செங்கோட்டையன் 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போவதாக கூறியுள்ளாரே? என கேள்வி கேட்டபோது, செங்கோட்டையன் 5-ந்தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறுவார் என பார்ப்போம் என தெரிவித்து விட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து திருமண விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் நிருபர்கள், நீங்கள் சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் 5-ந்தேதி பதில் கூறுகிறேன் என தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜய குமாரும், செங்கோட்டையனுடன் முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் அரைமணி நேர இடைவெளியில் ஒருவரை ஒருவர் சந்திக்காத வண்ணம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றனர்.






