என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி"

    • 12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
    • பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆம்ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப் பற்றியது.

    டெல்லி மாநகராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. இதில் 9 வார்டு பாஜக வசமும், எஞ்சிய 3 வார்டுகள் ஆம்ஆத்மி வசமும் இருந்தன.

    12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.

    இதில் பா.ஜனதா, ஆம் ஆத்மி ஆகியவை தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் தலா 1 வார்டுகளை கைப் பற்றியது. மற்ற சில வார்டு களில் பா.ஜனதா முன்னி லையில் உள்ளன.

    பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • அடுத்த கூட்டத்தொடரில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது.

    பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக  சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சண்டிகருக்கு தனியாக துணைநிலை ஆளுநரை நியமிக்கும் வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

    அரியானாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே ஆளுநர்கள் உள்ளனர். தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசம் பஞ்சாப் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் பஞ்சாப் ஆளுநாரால் நிர்வகிக்கப்பட்டுவரும் சண்டிகருக்கு, துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டால், தலைநகர் மீதான உரிமைகள் நீர்த்துப்போகச் செய்யும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சண்டிகருக்கு தனியே துணை நிலை ஆளுநரை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு கடுமையான அநீதி என்றும், பஞ்சாபின் தலைநகரைப் அபகரிக்க பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

    ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.

    பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

    செப்டம்பர் 2 அன்று அரியானாவில் உறவினர் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய சென்ற போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற ஹர்மீத் சிங்கை போலீசார் தேடி வந்தனர்.

    பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே அவருக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் ஹர்மீத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.

    அந்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி என்றும் தனக்கு ஜாமீன் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றும் பேசியுள்ளார். மேலும் தனது சொந்த கட்சியினர் குறித்தும் அந்த பேட்டியில் அவர் குறை கூறியுள்ளார். 

    • நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மகாதேவ்புரா சட்டசபை தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கு அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருந்தாக குற்றம் சாட்டினார். அத்துடன் ஆலந்த் தொகுதியில் 6 ஆயிரத்துக்கு அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார்.

    மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் வகையில் பல்வேறு தரவுகளையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

    தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்றுமுன் தினம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    இதனிடையே, நேற்று நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில், பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சின்ஹா, பூர்வாஞ்சல் மோர்ச்சா டெல்லி தலைவர் சந்தோஷ் ஓஹா என டெல்லியை சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லி தேர்தலில் வாக்களித்து இருந்தார்கள். இவர்கள் அனைவரும் தற்பொழுது பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்.

    இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    அனைவருக்கும் தெரிந்த நிர்வாகிகளே இவ்வளவு தைரியமாக கள்ள ஓட்டு போடுகிறார்கள் என்றால் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இப்படி வாக்களித்து இருப்பார்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி சந்தேகத்தை எழுப்பி உள்ளது. 

    • மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
    • அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.

    கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.

    தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

    இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

    அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.

    முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.  

    • டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும்
    • நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்

    பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

    இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.

    "எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்" என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.  

    • இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
    • சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி.

    ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

    சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தனது தொகுதி மக்களுக்கு மருத்துவமனை கேட்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏவை சிறையில் அடைக்க வேண்டிய அளவுக்கு பெரிய குற்றமா? மெஹ்ராஜ் மாலிக் ஆம் ஆத்மி கட்சியின் சிங்கம்.

    மக்களின் குரலாக மாறி அவர்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதும் போராடுவார். சிறை, அச்சுறுத்தல்கள் மற்றும் சதித்திட்டங்கள், இவை அனைத்தும் ஆம் ஆத்மியின் எந்த சிப்பாயையும் ஒருபோதும் பயமுறுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், " இது அரசாங்கத்தின் வெளிப்படையான சர்வாதிகாரம், மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்கள்.

    ஆனால் சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.  

    • இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
    • மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.

    ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    தோடா தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்ட முதல் சிட்டிங் எம்எல்ஏ ஆவார். இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

    சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக தோடா மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.

    இதன் அடிப்படையில், மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் மாலிக் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

    • அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
    • 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    இந்நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல,  37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் ஒரே அடியில் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியமும் கனவுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    நாட்டிற்கு ஏற்பட்ட எந்தவொரு பேரிடரையும் பஞ்சாப் எப்போதும் எதிர்த்து நிற்கிறது. இன்று, பஞ்சாப் நெருக்கடியில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுமாறு எனது நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என்று அழைப்பு விடுத்துள்ளார். 

    • பலாத்கார வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார்.
    • செல்லும் வழியில் ஹர்மீத் சிங் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

    சண்டிகர்:

    பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. கடந்த சட்டசபை தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இவர்மீது ஜிரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹர்மீத் சிங்கை கைதுசெய்தனர்.

    இந்நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹர்மீத் சிங்கும், அவரது உதவியாளர்களும் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

    போலீசார் கஸ்டடியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மித் சிங் தப்பி ஓடியது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தலைமறைவாகி இருக்கும் எம்.எல்.ஏ ஹர்மீத் சிங்கை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.
    • முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    டெல்லியில் ஆம ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரப் பரத்வாஜின் இல்லம் உட்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

    ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவமனை கட்டுமானத் திட்டங்களில் முறைகேடுகள் மற்றும் பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    2018-19 காலகட்டத்தில், 11 புதிய மருத்துவமனைகள் மற்றும் 13 ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளின் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ரூ.5,590 கோடி ஊழல் நடந்ததாக 2024 இல் அப்போதைய பாஜக எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர்களான சௌரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

    • பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தோம்.
    • அரியானா சட்டசபை மற்றும் குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனியாக சென்றுவிட்டது.

    காங்கிரஸ் எப்போதும் அதன் கூட்டாளிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. கோவாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அமித் பலேகர் தெரிவித்துள்ளார்.

    கோவாவில் 2027ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் பலேகர் கூறியதாவது:-

    கோவாவில் பொதுவாக சொல்லப்படும் விசயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பது மாதிரி. ஏனென்றால் இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் அங்கு மாறிவிடுவார்கள். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ.க்களை பெறும்போது, அவர்கள் பாஜக-வில் இணைந்து விடுவார்கள். கோவாவில் இப்படி நடந்ததை இரண்டு முறை பார்த்திருக்கிறோம். இதனால் மக்கள் அவ்வாறு உணர்கிறார்கள்.

    கடந்த மக்களை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது. ஆனால், குஜராத் (இடைத்தேர்தல்) மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அதன் கூட்டாளியை (ஆம் ஆத்மி) விட்டு விலகி துரோகம் இழைத்தது. காங்கிரஸ் உடன் கூட்டணி உருவாக்குவதற்கான கேள்விக்கே இடமில்லை.

    இவ்வாறு தெரிவித்தார்.

    40 தொகுதிகளை கொண்ட கோவாவில் ஆம் ஆத்மிக்கு 2 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.

    ×