என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ஹவானா ஓட்டல் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு
Byமாலை மலர்9 May 2022 10:11 PM GMT (Updated: 9 May 2022 10:11 PM GMT)
ஹவானா ஓட்டல் வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஹவானா:
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.
இந்த ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது விசாரணையில் தெரியவந்தது. சக்திவாய்ந்த வெடிவிபத்தால் ஓட்டலைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.
தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், ஹவானா ஓட்டல் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகளும் அடங்குவர்.
இதுகுறித்து அதிபர் மிகுவல் டயஸ் கேனல் கூறுகையில், இது குண்டு வெடிப்பு தாக்குதல் கிடையாது. இது ஒரு சோகமான விபத்து என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...தைவானை தாக்கிய 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X