search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சீர்குலைந்து கிடக்கும் புச்சா நகர்
    X
    சீர்குலைந்து கிடக்கும் புச்சா நகர்

    உக்ரைனில் ஒரே இடத்தில் 300 உடல்கள் புதைப்பு: தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்கள்

    கீவ் அருகில் உள்ள புச்சா நகரில் கொல்லப்பட்ட உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்த நிலையில், ஒரே இடத்தில் சுமார் 300 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது.
    உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் மக்கள் சென்றனர். அப்போது தெருக்களில் பலரது உடல்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    புச்சாவில் ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று புச்சா மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார். மேலும் அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்தார்.

    புச்சா பகுதியில் 300 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு உள்ளனர். நகர தெருக்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. சாலைகளில் உடல்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் ஒரே இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி உடல்களை புதைத்தோம் என்றார். இவர்கள் ரஷிய படையால் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இர்பின் பகுதியில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×