என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ராணி எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் கோட்டை மீது பறக்க தடை
Byமாலை மலர்11 Jan 2022 7:54 PM GMT (Updated: 11 Jan 2022 7:54 PM GMT)
விண்ட்சர் கோட்டையைச் சுற்றி 1.25 நாட்டிக்கல் மைல் சுற்றளவில் 2,500 அடி வரை வான்வெளி பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.
லண்டன்:
தென்கிழக்கு இங்கிலாந்தின் பர்க்ஷெயரில் உள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வின்ட்சர் கோட்டை அமைந்துள்ளது.
கடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வின்ட்சர் கோட்டைக்குள் அத்துமீறி ஆயுதத்துடன் நுழைய முயன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், வின்ட்சர் கோட்டை மீது பாதுகாப்பு காரணங்களுக்காக வான்வெளியில் எதுவும் பறக்கக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இங்கிலாந்து காவல்துறை.
இங்கிலாந்து காவல்துறை சிவில் ஏவியேஷன் ஆணையத்திற்கு விண்ணப்பித்ததை அடுத்து இந்த பாதுகாப்பு வின்ட்சர் கோட்டைக்கு வழங்கப்பட்டுள்ளது.
வின்ட்சர் கோட்டையைச் சுற்றியுள்ள 1.25 கடல் மைல் சுற்றளவில் 2,500 அடி வரை வான்வெளியைப் பயன்படுத்த இந்த உத்தரவு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய எந்த விமானங்களுக்கும் அங்கீகாரம் தேவைப்படும் என தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...அமெரிக்காவில் ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: உலக அளவில் புதிய உச்சம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X