search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    துப்பாக்கிச்சூடு
    X
    துப்பாக்கிச்சூடு

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பரிதாப பலி

    டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
     
    இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.
     
    இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்லண்ட் பகுதியில் உள்ள காஸ் நிரப்பும் மையத்தில் லாரியில் வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன்பின் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

    இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
     
    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×