என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
அமெரிக்காவில் சூறாவளி: பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு
Byமாலை மலர்12 Dec 2021 11:57 PM GMT (Updated: 13 Dec 2021 1:44 AM GMT)
அமெரிக்காவில் ஒரே இரவில் 6 மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்:
பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவில் அண்மை காலமாக சக்தி வாய்ந்த புயல் மற்றும் சூறாவளிகள் அடிக்கடி தாக்கி வருகின்றன. இவை அங்கு அதிக அளவு உயிர் சேதத்தையும், மிகப்பெரிய அளவில் பொருள் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே இரவில் அடுத்தடுத்து தாக்கிய அதிபயங்கர சூறாவளிகள் அமெரிக்காவின் 6 மாகாணங்களை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டன. இந்த சூறவாளிகள் அங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்திவிட்டன.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, இல்லினாய்ஸ், டென்னிசி, ஆர்கன்சாஸ், மிசூரி மற்றும் மிசிசிப்பி ஆகிய 6 மாகாணங்களை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலைக்குள் 30-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் தாக்கின.
இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது கென்டக்கி மாகாணம். அங்கு மணிக்கு 361 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது.
இந்த சூறாவளி காற்றில் சிக்கி அங்குள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலை ஒன்று இடிந்து விழுந்தது, பெரும் உயிர் சேதத்துக்கு காரணமானது.
இதனால் கென்டக்கி மாகாணத்தில் மட்டும் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என மாகாண கவர்னர் ஆண்டி பெஷியர் கவலை தெரிவித்திருந்த நிலையில், அங்கு இதுவரை 70 பேர் சூறாவளியால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிடங்கு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். இதுதவிர டென்னிசி மாகாணத்தில் 4 பேர், ஆர்கன்சாஸ் மற்றும் மிசூரி மாகாணங்களில் தலா 2 பேர் சூறவாளிக்கு பலியாகினர். இதன் மூலம் ஒரே இரவில் அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட அதிபயங்கர சூறாவளிகளுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி தாக்கி இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளின் இன்னும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். மேலும் சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்ட கென்டக்கி மாகாணத்தில் அவர் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவ தளபதி இன்று ஆய்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X