என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜீரியா: மசூதியில் நடைபெற்ற பயங்கர தாக்குதலில் 18 கிராம மக்கள் பலி
Byமாலை மலர்26 Oct 2021 11:03 AM GMT (Updated: 26 Oct 2021 11:03 AM GMT)
வடக்கு நைஜீரியாவில் உள்ள மசூதியில் நேற்று அதிகாலை நடைபெற்ற தொழுகையின்போது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் கிராம மக்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா மஷேகு பகுதி மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மசூதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சுமார் 18 கிராம மக்கள் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் இன வன்முறை, நீர் மற்றும் நிலத்தை பயன்படுத்துவதற்கான மோதல் பல சகாப்தங்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக நீடிக்கும் மோதலில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். இந்த மோதலில் சிக்கிய புலானி மக்களில் சிலர் உள்ளூர் விவசாய சமூகங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. குறிப்பாக, வடமேற்கு மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
இதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு வடமேற்கு சோகோடோ மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மசூதியில் இந்த தாக்குதல் மீண்டும் நடந்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில போலீஸ் கமிஷனர் மாண்டே குரியாஸ் கூறியதாவது:-
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மசூதியை சுற்றி வளைத்து திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் கிராம மக்களுக்கும் புலானி கால்நடை மேய்ப்பாளர்க்கும் இடையிலான மோதலுடன் தொடர்புடையது. மாஷேகு பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பாக இருப்பதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது" என்றார்.
நைஜீரியாவில் இன வன்முறை, நீர் மற்றும் நிலத்தை பயன்படுத்துவதற்கான மோதல் பல சகாப்தங்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக நீடிக்கும் மோதலில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். இந்த மோதலில் சிக்கிய புலானி மக்களில் சிலர் உள்ளூர் விவசாய சமூகங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. குறிப்பாக, வடமேற்கு மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
இதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு வடமேற்கு சோகோடோ மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மசூதியில் இந்த தாக்குதல் மீண்டும் நடந்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில போலீஸ் கமிஷனர் மாண்டே குரியாஸ் கூறியதாவது:-
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மசூதியை சுற்றி வளைத்து திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் கிராம மக்களுக்கும் புலானி கால்நடை மேய்ப்பாளர்க்கும் இடையிலான மோதலுடன் தொடர்புடையது. மாஷேகு பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பாக இருப்பதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X