என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலை வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலை](https://img.maalaimalar.com/Articles/2021/Sep/202109021541544617_Tamil_News_7-Dead-As-New-York-City-Hit-By-Flash-Flood-Caused-By-Storm_SECVPF.gif)
X
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலை
இடா புயல் தாக்கத்தால் கடும் வெள்ளப்பெருக்கு- நியுயார்க்கில் 7 பேர் உயிரிழப்பு
By
மாலை மலர்2 Sep 2021 10:11 AM GMT (Updated: 2 Sep 2021 10:11 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
இடா புயல் காரணமாக நியூயார்க் அருகில் உள்ள நேவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நியூயார்க்:
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை இடா புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. புயலின் தாக்கத்தினால் தொடர்ந்து கனமழை பெய்கிறது.
இந்நிலையில், இடா புயலின் தாக்கத்தால் நியுயார்க் நகரிலும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நேற்று முதல் இன்று அதிகாலை வரை மழை நீடித்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் ஆறுகள் போன்று காட்சியளிக்கின்றன. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அருகிலுள்ள நேவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் உள்ளிட்ட பல பெருநகரங்களில் முக்கிய சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், நியுயார்க் நகரில் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி நேற்று இரவு 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடா புயல் வடக்கு நோக்கி நகர்வதால் நியூ இங்கிலாந்திலும் இன்று கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)