search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தால் சேதமடைந்த பகுதி
    X
    வெள்ளத்தால் சேதமடைந்த பகுதி

    துருக்கி வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

    துருக்கி நாட்டில் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை இடிந்து விழுந்தன.
    இஸ்தான்புல்:

    துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்கள் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

    இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,250-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

    வெள்ளத்தால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காஸ்டமோனு பகுதியில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
    Next Story
    ×