என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கி வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
Byமாலை மலர்15 Aug 2021 8:07 PM GMT (Updated: 15 Aug 2021 8:07 PM GMT)
துருக்கி நாட்டில் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை இடிந்து விழுந்தன.
இஸ்தான்புல்:
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்கள் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,250-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காஸ்டமோனு பகுதியில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X