என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு
Byமாலை மலர்16 Feb 2021 10:43 PM GMT (Updated: 16 Feb 2021 10:43 PM GMT)
ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ:
தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.
இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவையும் சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.
இந்த தீவை டயோயுடாவ் தீவுகள் என்று அழைக்கும் சீனா, 1783 மற்றும் 1785-ம் ஆண்டுகளில் ஜப்பானிய வரைபடங்களில் இந்த தீவுகள் சீனா பிரதேசமாக குறிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பான் அதனை சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் கூறி வருகிறது.
அதேசமயம் 1895-ம் ஆண்டு முதல் இந்த தீவின் மீது தங்கள் நாடு இறையாண்மையை கொண்டுள்ளதாக ஜப்பான் வாதிடுகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
செங்காகு தீவை கைப்பற்றுவதற்கு சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக ஜப்பானுக்கு சொந்தமான அந்த தீவுக்குள் சீனாவின் போர் கப்பல்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவதும் அதனை ஜப்பான் வன்மையாக கண்டிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட முறை சீன கப்பல்கள் ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஜப்பான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சீனா இதனை தங்களுக்கு சொந்தமான தீவில் தங்கள் நாட்டின் கடற்படை ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறி நியாயப்படுத்துகின்றது.
இந்த நிலையில் சீன கடற்படையின் 4 ரோந்து கப்பல்கள் செங்காகு தீவு அருகே உள்ள ஜப்பானின் நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. பின்னர் இந்த 4 கப்பல்களும் நேற்று அதிகாலை வரை ஜப்பான் எல்லைக்குள்ளேயே இருந்தன. சீன கடற்படையின் இந்த நடவடிக்கை ஜப்பானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் சீனாவிடம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் மந்திரி சபையின் தலைமை செயலாளர் கட்சுனோபு கட்டோ பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “சீன ரோந்து கப்பல்கள் நம் நாட்டின் பிராந்திய நீரில் நுழைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. மேலும் அந்த ரோந்து கப்பல்கள் ஜப்பானிய மீன்பிடி கப்பல்களை அணுக முயற்சித்துள்ளன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தூதரக ரீதியாக சீன தரப்பிடம் நமது வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்” என கூறினார்.
தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.
இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவையும் சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.
இந்த தீவை டயோயுடாவ் தீவுகள் என்று அழைக்கும் சீனா, 1783 மற்றும் 1785-ம் ஆண்டுகளில் ஜப்பானிய வரைபடங்களில் இந்த தீவுகள் சீனா பிரதேசமாக குறிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பான் அதனை சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் கூறி வருகிறது.
அதேசமயம் 1895-ம் ஆண்டு முதல் இந்த தீவின் மீது தங்கள் நாடு இறையாண்மையை கொண்டுள்ளதாக ஜப்பான் வாதிடுகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
செங்காகு தீவை கைப்பற்றுவதற்கு சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக ஜப்பானுக்கு சொந்தமான அந்த தீவுக்குள் சீனாவின் போர் கப்பல்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவதும் அதனை ஜப்பான் வன்மையாக கண்டிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட முறை சீன கப்பல்கள் ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஜப்பான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சீனா இதனை தங்களுக்கு சொந்தமான தீவில் தங்கள் நாட்டின் கடற்படை ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறி நியாயப்படுத்துகின்றது.
இந்த நிலையில் சீன கடற்படையின் 4 ரோந்து கப்பல்கள் செங்காகு தீவு அருகே உள்ள ஜப்பானின் நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. பின்னர் இந்த 4 கப்பல்களும் நேற்று அதிகாலை வரை ஜப்பான் எல்லைக்குள்ளேயே இருந்தன. சீன கடற்படையின் இந்த நடவடிக்கை ஜப்பானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் சீனாவிடம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் மந்திரி சபையின் தலைமை செயலாளர் கட்சுனோபு கட்டோ பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “சீன ரோந்து கப்பல்கள் நம் நாட்டின் பிராந்திய நீரில் நுழைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. மேலும் அந்த ரோந்து கப்பல்கள் ஜப்பானிய மீன்பிடி கப்பல்களை அணுக முயற்சித்துள்ளன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தூதரக ரீதியாக சீன தரப்பிடம் நமது வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X