
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறும்போது, இம்ரான்கான் அடுத்த மாதம் இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கை பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு செல்ல உள்ளதை இந்தியா உன்னிப்பாக கவனிக்கும்.