என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு பத்திரிக்கை உரிமையாளர் மீது சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு
Byமாலை மலர்11 Dec 2020 4:09 PM GMT (Updated: 11 Dec 2020 4:09 PM GMT)
ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த ஜனநாயக ஆதரவு பத்திரிக்கை உரிமையாளர் மீது சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங்:
சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் அமலுக்கு வந்தது. தேசிய பாதுகாப்பு சட்டம் அமலுக்குவந்ததில் இருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஹாங்காங் மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கின் அரசியல் உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிட்டு வருகிறது.
இதற்கிடையில், ஹாங்காங்கின் மிகப்பெரிய பத்திரிக்கை நிறுவனமாக செயல்பட்டுவரும் நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ். ஹாங்காங் ஜனநாயத்திற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் இந்த பத்திரிக்கையின் உரிமையாளர் ஜிம்மி லேய். 73 வயதான ஜிம்மி லேய் தனது நாளிதழ் மூலம் ஜனநாயக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதையடுத்து, ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையை நடத்து நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சீன ஆதரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை அலுவலக இடத்தை ஒப்பந்தத்தை மீறி பயன்படுத்தியதாக ஜிம்மி லேய் மற்றும் அவரது 2 ஊழியர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டு 3 பேரும் ஹாங்காங் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இம்மாத தொடக்கத்தில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், சிறையில் உள்ள ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை நிறுவன உரிமையாளர் ஜிம்மி லேய் மீது தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. 73 வயது நிரம்பிய நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக ஹாங்காங் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், போலீசார் தரப்பில் ஜிம்மி லேய் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவர்தான் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விழைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாக ஜிம்மி லேய் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக ஆதரவு பத்திரிக்கை உரிமையாளரும், சமூக செயல்பாட்டாளருமான ஜிம்மி லேய் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு சீனா மீது பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹாங்காங்கில் மிகவும் செல்வாக்குபெற்ற நபரான ஜிம்மி லேய் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் ஹாங்காங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள ஜிம்மி லேய் கைது செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X