என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்
Byமாலை மலர்3 Dec 2020 2:36 AM GMT (Updated: 3 Dec 2020 2:36 AM GMT)
குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் தொடர்பாக இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா நேரில் ஆஜராகி இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.
இஸ்லாமாபாத்:
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ஆனால், இந்தியாவின் முறையீட்டின்பேரில், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அத்தர் மினல்லா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. ஆனால், குல்பூஷண் ஜாதவுக்கு இந்தியா இன்னும் வக்கீல் நியமிக்கவில்லை.
இந்தநிலையில், நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தூதரகம் சார்பில் ஆஜரான வக்கீல் ஷாநவாஸ் நூன், குல்பூஷண் ஜாதவுக்கு வக்கீல் நியமிப்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா நேரில் ஆஜராகி இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார். அதை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ஆனால், இந்தியாவின் முறையீட்டின்பேரில், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அத்தர் மினல்லா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. ஆனால், குல்பூஷண் ஜாதவுக்கு இந்தியா இன்னும் வக்கீல் நியமிக்கவில்லை.
இந்தநிலையில், நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தூதரகம் சார்பில் ஆஜரான வக்கீல் ஷாநவாஸ் நூன், குல்பூஷண் ஜாதவுக்கு வக்கீல் நியமிப்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா நேரில் ஆஜராகி இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார். அதை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X