என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய எல்லையை ஒட்டி புதிய ரெயில் பாதை திட்டத்தை தொடங்கியது சீனா- விரைந்து முடிக்க அதிபர் உத்தரவு
Byமாலை மலர்9 Nov 2020 7:58 AM GMT (Updated: 9 Nov 2020 7:58 AM GMT)
அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் உள்ள சீனா - திபெத் இடையேயான புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
பீஜிங்:
கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீற முயன்றதால் ஏற்பட்ட மோதல் மற்றும் உயிரிழப்புகளால் கடந்த மே மாதம் முதல் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களையும், ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களையும் குவித்து வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.
இந்த மோதலை தடுத்து பதற்றத்தை தணிப்பதற்கு இரு தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் வரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து படைகளை விலக்குவது குறித்து முக்கியமாக பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிகிறது.
அந்தவகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் தென்மேற்கே உள்ள சிசுவான் மாகாணத்தில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் லின்ஜி பகுதிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் 'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மிக விரைவாக முடிக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சீனா - திபெத் இடையே கின்காய் - திபெத் ரெயில் பாதை திட்டம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டாவது ரெயில் பாதை திட்டமாக சிசுவான் - திபெத் ரெயில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ரெயில் பாதை அருணாச்சபிரதேச எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ரெயில் பாதையானது திபெத்தின் லின்சி பகுதியாக வழியாக அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X