என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாள பிரதமருடன் இந்திய ராணுவ தளபதி நரவனே சந்திப்பு
Byமாலை மலர்6 Nov 2020 8:51 AM GMT (Updated: 6 Nov 2020 8:51 AM GMT)
நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தளபதி நரவனே, நேபாள பிரதமரை சந்தித்து பேசினார்.
காத்மாண்டு:
இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவனே, அண்டை நாடான நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று நேபாளத்தின் ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் பேசினர்.
இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை இந்திய ராணுவ தளபதி நரவனே சந்தித்து பேசினார். பலுவதாரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும், இன்று மாலை நரவனே நாடு திரும்புகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X