என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியா: நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 11 பேர் பலி
Byமாலை மலர்22 Oct 2020 7:46 PM GMT (Updated: 22 Oct 2020 7:46 PM GMT)
இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஜகார்தா:
இந்தோனேசியாவின் தெற்று சுமத்ரா மாகாணத்தின் மவ்ரா இமிம் ரிஜென்சி பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டி எடுக்கும் வேலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சுரங்க நடவடிக்கையின் போது எதிர்பாராத விபத்துக்களும் நிகழ்கிறது.
இந்நிலையில், ரிஜென்சி பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் 10-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர். 20 மீட்டர் ஆளத்தில் இந்த சுரங்க வேலைகள் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு பெய்த கனமழை காரணமாக சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் இடிந்து விழுந்தது.
இதில், சுரங்கவேலை செய்துகொண்டிருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்ததனர். தகவலறிந்து அக்கம்பக்க கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலியான அனைவரது உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக மீட்ப்புக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் சட்டவிரோத சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் தெற்று சுமத்ரா மாகாணத்தின் மவ்ரா இமிம் ரிஜென்சி பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டி எடுக்கும் வேலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சுரங்க நடவடிக்கையின் போது எதிர்பாராத விபத்துக்களும் நிகழ்கிறது.
இந்நிலையில், ரிஜென்சி பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் 10-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர். 20 மீட்டர் ஆளத்தில் இந்த சுரங்க வேலைகள் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு பெய்த கனமழை காரணமாக சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் இடிந்து விழுந்தது.
இதில், சுரங்கவேலை செய்துகொண்டிருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்ததனர். தகவலறிந்து அக்கம்பக்க கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலியான அனைவரது உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக மீட்ப்புக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் சட்டவிரோத சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X