என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன உதிரிபாகங்களுக்கு அமெரிக்கா வரி - முன்னணி கார் நிறுவனங்கள் எதிர்த்து வழக்கு
Byமாலை மலர்24 Sep 2020 11:10 PM GMT (Updated: 24 Sep 2020 11:10 PM GMT)
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் சுங்க வரிகளை அறிமுகம் செய்துள்ளது.
வாஷிங்டன்:
உலகின் இரு பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே 2018-ம் ஆண்டு தொடங்கிய வர்த்தகப்போர் தொடர்கிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீன பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் வரிகள் விதித்து வருகின்றன. இதனால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் சுங்க வரிகளை அறிமுகம் செய்துள்ளது.
இது அங்குள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான டெஸ்லா, வோல்வோ, போர்டு மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஆகியவற்றுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அந்த கார் நிறுவனங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள சர்வதேச வர்த்தக கோர்ட்டில் வழக்குகளை தொடுத்துள்ளன. இதுபற்றி டெஸ்லா கார் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “இந்த வரிவிதிப்பு தன்னிச்சையானது, விரிவானது, துரோகமானது” என காட்டமாக கூறியது.
இந்த நிறுவனத்தின் அதிபரான எலோன் மஸ்க், இறக்குமதி வரிகளை டிரம்ப் நிர்வாகம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.
உலகின் இரு பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே 2018-ம் ஆண்டு தொடங்கிய வர்த்தகப்போர் தொடர்கிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீன பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் வரிகள் விதித்து வருகின்றன. இதனால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் சுங்க வரிகளை அறிமுகம் செய்துள்ளது.
இது அங்குள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான டெஸ்லா, வோல்வோ, போர்டு மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஆகியவற்றுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அந்த கார் நிறுவனங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள சர்வதேச வர்த்தக கோர்ட்டில் வழக்குகளை தொடுத்துள்ளன. இதுபற்றி டெஸ்லா கார் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “இந்த வரிவிதிப்பு தன்னிச்சையானது, விரிவானது, துரோகமானது” என காட்டமாக கூறியது.
இந்த நிறுவனத்தின் அதிபரான எலோன் மஸ்க், இறக்குமதி வரிகளை டிரம்ப் நிர்வாகம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X