என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய பாதுகாப்பு சட்டமா? கொரோனா வைரசா? - ஹாங்காங்கில் பொதுத்தேர்தல் 1 ஆண்டுகள் தள்ளிவைப்பு
Byமாலை மலர்1 Aug 2020 11:06 PM GMT
ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்:
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம்.
ஆகையால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நாடு இரண்டு அமைப்பு என்ற சீன-ஹாங்காங்கின் ஆட்சி நடைமுறை இனி ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற நிலைக்கு செல்கிறது.
இதற்கிடையில், ஹாங்காங்கில் அடுத்த மாதம் (செப்டம்பர் 11) பொதுத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஹாங்காங் சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது.
அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹாங்காங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களாக இருப்பர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் பங்கேற்க ஜனநாயகத்திற்கு ஆதரவான வேட்பாளர்கள் 12 பேருக்கு ஹாங்காங் அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது.
இந்நிலையில், ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அடுத்தமாதம் நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக நிர்வாக அரசு தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் வேகமெடுத்தது. அங்கு தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்தாக்குதலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் வேகமாக பரவுவதால் அடுத்த மாதம் நடைபெறவிருந்த தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஹாங்காங் அரசு
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையுடன் மக்கள் இருப்பதால் தேர்தல் ஹாங்காங் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X