என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து - 10 பேர் மாயம்
Byமாலை மலர்21 Jun 2020 2:39 PM GMT (Updated: 21 Jun 2020 2:39 PM GMT)
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 10 பேரை காணவில்லை.
ஜகார்த்தா:
இந்தோனோசியாவில் கிரகடாவ் எரிமலைக்கு அருகேயுள்ள ரகட்டா தீவில் இருந்து கே.எம்.புஸ்பிட்டா ஜெயா என்ற படகு புறப்பட்டு சென்றது. இதில் மொத்தம் 16 பேர் பயணம் செய்தனர்.
இந்தப் படகு சற்றும் எதிர்பாராத வகையில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுந்தா ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தேசிய தேடல் மட்டும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு விட்டனர்.
இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது எனவும், இந்த பணியில் ஏராளமான மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு படை அலுவலக செய்தி தொடர்பாளர் யூசுப் லத்தீப் தெரிவித்தார்.
பரந்த தீவு கூட்டங்களை கொண்டுள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி படகு விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு தரத்தை தளர்த்துவதுதான் இத்தகைய படகு விபத்து துயரங்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்தோனோசியாவில் கிரகடாவ் எரிமலைக்கு அருகேயுள்ள ரகட்டா தீவில் இருந்து கே.எம்.புஸ்பிட்டா ஜெயா என்ற படகு புறப்பட்டு சென்றது. இதில் மொத்தம் 16 பேர் பயணம் செய்தனர்.
இந்தப் படகு சற்றும் எதிர்பாராத வகையில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுந்தா ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தேசிய தேடல் மட்டும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு விட்டனர்.
இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது எனவும், இந்த பணியில் ஏராளமான மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு படை அலுவலக செய்தி தொடர்பாளர் யூசுப் லத்தீப் தெரிவித்தார்.
பரந்த தீவு கூட்டங்களை கொண்டுள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி படகு விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு தரத்தை தளர்த்துவதுதான் இத்தகைய படகு விபத்து துயரங்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X