என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிற்சியின் போது அமெரிக்க போர் விமானம் விபத்து - விமானி பலி
Byமாலை மலர்15 Jun 2020 10:37 PM GMT (Updated: 15 Jun 2020 10:37 PM GMT)
அமெரிக்க போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி விமானி உயிரிழந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் சோபோஃக்ஸ் நகரில் அந்நாட்டுக்கு சொந்தமான விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. அங்கு நட்பு நாடான அமெரிக்காவின் போர் விமானங்களும், வீரர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் அந்நாட்டுக்கு சொந்தமான எஃப் 15 ஈகில் ரக போர் விமானம் ஒன்றில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிக்கொண்டிருந்தார்.
வானில் வட்டமிட்டப்படி பறந்து கொண்டிருந்த அந்த போர் விமானம் புறப்பட்ட சிறுது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, விமானத்தை தேடும் பணியை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க படைகள் தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்நிலையில், யார்க்ஷிரின் பகுதியில் இருந்து 74 நாட்டிக்கல் மையில் தொலைவில் போர் விமானம் விபத்துக்குள்ளானதை படையினர் கண்டுபிடித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி சென்ற அமெரிக்க விமானப்படை விமானி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X