என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 7 பேர் பலி
Byமாலை மலர்28 March 2020 6:14 AM GMT (Updated: 28 March 2020 6:14 AM GMT)
ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் 4-வது மிகப்பெரிய நகரமான யேகாடெரின்பர்க்கில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.
இதனால் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேற தொடங்கினர்.
ஆனால் அதற்குள் ஒட்டு மொத்த குடியிருப்பையும் தீ சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ரஷியாவின் 4-வது மிகப்பெரிய நகரமான யேகாடெரின்பர்க்கில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.
இதனால் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேற தொடங்கினர்.
ஆனால் அதற்குள் ஒட்டு மொத்த குடியிருப்பையும் தீ சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X