என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கானா: இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் பலி
Byமாலை மலர்9 March 2020 9:59 PM GMT (Updated: 9 March 2020 9:59 PM GMT)
கானா நாட்டில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
அக்ரா:
கானா மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அந்நாட்டின் போனொ கிழக்கு மாகாணம் கின்டபோ நகரில் இருந்து டெட்ஸிமென் நகர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கின்டபோ-டமெல் தேசிய நெடுச்சாலையில் உள்ள அமொமா குவன்டா என்ற கிராமம் அருகே பஸ் சென்றபோது சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் இரண்டு பஸ்களிலும் தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் 35 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X