என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்ஸ் : பள்ளியில் மர்மநபர் கையெறி குண்டு தாக்குதல் - 2 பேர் பலி
Byமாலை மலர்28 Nov 2019 12:05 PM GMT (Updated: 28 Nov 2019 12:05 PM GMT)
பிலிப்பைன்ஸ் நாட்டு பள்ளியில் மர்மநபர் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் போலிஸ் அதிகாரி உள்பட இருவர் பலியாகினர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிசாமிஸ் ஒரியெண்டல் மாகாணத்தில் இனிடாவோ கல்வி நிலையம் உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 11.20 மணியளவில் மர்மநபர் ஒருவர் பள்ளியில் கையெறி குண்டுகளை வீசியுள்ளார்.
இதில், ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய அந்த மர்மநபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X