என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் விலைமதிக்க முடியாத பழங்கால நகைகள் கொள்ளை
Byமாலை மலர்27 Nov 2019 5:08 AM GMT (Updated: 27 Nov 2019 5:08 AM GMT)
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் விலைமதிக்க முடியாத பழங்கால நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெர்லின்:
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாக்சனி மாகாணத்தின் தலைநகர் டிரஸ்டனில் ‘கிரீன் வாலட்’ என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த நகை பெட்டி ஒன்றை கொள்ளையடித்து சென்றனர்.
அந்த நகை பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள் உள்பட விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர். அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், அதை அடிப்படையாக கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாக்சனி மாகாணத்தின் தலைநகர் டிரஸ்டனில் ‘கிரீன் வாலட்’ என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த நகை பெட்டி ஒன்றை கொள்ளையடித்து சென்றனர்.
அந்த நகை பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள் உள்பட விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர். அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், அதை அடிப்படையாக கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X