என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையின் ஏழாவது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே
Byமாலை மலர்17 Nov 2019 12:27 PM GMT (Updated: 17 Nov 2019 12:27 PM GMT)
இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
கொழும்பு:
இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசுக்கு சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் இருந்து புதிய அதிபர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையின் அவசர கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், இலங்கையின் ஏழாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசுக்கு சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் இருந்து புதிய அதிபர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையின் அவசர கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X