என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹாங்காங் போராட்டம்: களமிறங்கிய சீன ராணுவம்
Byமாலை மலர்16 Nov 2019 12:55 PM GMT (Updated: 16 Nov 2019 12:55 PM GMT)
ஹாங்காங் போராட்டத்தை நசுக்க தனது ராணுவத்தை சீனா களமிறக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாங்காங்:
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதி பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்தல், ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.
வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த போராட்டம் நாளடைவில் தினமும் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போது, சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் சூறையாடி வருகின்றனர்.
மேலும், ஹாங்காங் சாலைகளில் தடுப்புகளை அமைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஹாங்காங் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
ஆனால் சீனா தற்போதுவரை தனது ராணுவத்தை போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இந்நிலையில், சீன ராணுவத்தின் ஹாங்காங் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹாங்காங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர்.
ராணுவ உடையில் அல்லாமல் பச்சை நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நிற சாட்ஸ் அணிந்து களமிறங்கியுள்ள சீன ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுதல் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஹாங்காங்கில் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தில் முதல்முறையாக சீன ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது போராட்டக்காரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X