என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 கட்சிகள் ஆதரவு
Byமாலை மலர்6 Nov 2019 2:31 AM GMT (Updated: 6 Nov 2019 2:31 AM GMT)
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கொழும்பு :
இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வருகிற 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. ஒரு கோடியே 50 லட்சம்பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில், சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார்.
இவர், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதற்கும், காணாமல் போனதற்கும் காரணமாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அகில இலங்கை திராவிட மகாசபா, இலங்கை டெலோ கட்சி, இந்திய வம்சாவளி மக்கள் கட்சி உள்பட 15 கட்சிகள் ஆதரவு தர முன்வந்துள்ளன.
இலங்கை பொதுஜன பெரமுனாவுடன் இந்த 15 கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டன.
இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேவை ஆதரிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி உள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வருகிற 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. ஒரு கோடியே 50 லட்சம்பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில், சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார்.
இவர், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதற்கும், காணாமல் போனதற்கும் காரணமாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அகில இலங்கை திராவிட மகாசபா, இலங்கை டெலோ கட்சி, இந்திய வம்சாவளி மக்கள் கட்சி உள்பட 15 கட்சிகள் ஆதரவு தர முன்வந்துள்ளன.
இலங்கை பொதுஜன பெரமுனாவுடன் இந்த 15 கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டன.
இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேவை ஆதரிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X