என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்லாந்து பிரதமர், இந்தோனேசியா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
Byமாலை மலர்3 Nov 2019 7:35 AM GMT (Updated: 3 Nov 2019 7:35 AM GMT)
இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாங்காக் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பிரதமர் மற்றும் இந்தோனேசியா அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பாங்காக்:
இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
நேற்று பிற்பகல் பாங்காக் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேரியட் மார்கிஸ் ஹோட்டலுக்கு வந்த அவரை தாய்லாந்தில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இன்று காலை தொடங்கிய இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார்.
முன்னதாக, தாய்லாந்தில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், தாய்லாந்து பிரதமர் சான்-ஓ-சா மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியாவுடனான பல்வேறுதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
நேற்று பிற்பகல் பாங்காக் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேரியட் மார்கிஸ் ஹோட்டலுக்கு வந்த அவரை தாய்லாந்தில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயத்தையும் நேற்றிரவு பிரதமர் மோடி வெளியிட்டார்.
இன்று காலை தொடங்கிய இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார்.
முன்னதாக, தாய்லாந்தில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், தாய்லாந்து பிரதமர் சான்-ஓ-சா மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியாவுடனான பல்வேறுதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X