என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 ஆண்டுகளுக்கு பிறகு முஷரப் நாளை பாகிஸ்தான் திரும்புகிறார்
Byமாலை மலர்5 Oct 2019 9:41 AM GMT (Updated: 5 Oct 2019 9:41 AM GMT)
3 ஆண்டுக்கு பிறகு முஷரப் நாளை பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (76). இவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
‘அமிலாய்டோசிஸ்’ என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அவர் துபாயில் தங்கியுள்ளார். கடந்த 2016 மார்ச் மாதம் முதல் அங்கேயே தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் ஆட்சியில் இருந்த போது 2007-ம் ஆண்டில் அரசியல் சட்டத்தை முடக்கி வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
2014-ம் ஆண்டு இது தேச துரோக வழக்காக இவர் மீது பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 3 ஆண்டுக்கு பிறகு இவர் நாளை(6-ந்தேதி) பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு திரும்பும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (76). இவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
‘அமிலாய்டோசிஸ்’ என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அவர் துபாயில் தங்கியுள்ளார். கடந்த 2016 மார்ச் மாதம் முதல் அங்கேயே தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் ஆட்சியில் இருந்த போது 2007-ம் ஆண்டில் அரசியல் சட்டத்தை முடக்கி வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
2014-ம் ஆண்டு இது தேச துரோக வழக்காக இவர் மீது பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 3 ஆண்டுக்கு பிறகு இவர் நாளை(6-ந்தேதி) பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு திரும்பும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X