என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானுக்கு வந்த இம்ரான் கான் விமானத்தில் கோளாறு - நியூயார்க்கில் அவசர தரையிறக்கம்
Byமாலை மலர்28 Sep 2019 11:35 AM GMT (Updated: 28 Sep 2019 11:35 AM GMT)
ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இஸ்லாமாபாத் நகருக்கு புறப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வந்த விமானத்தில் தீடீரென கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நியூயார்க்:
சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சவுதி மன்னரின் தனி விமானத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றதாக முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இம்ரான் கான் இன்று நியூயார்க்கில் இருந்து இஸ்லாமாபாத் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முஹம்மது குரைஷி, உயரதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும் விமானத்தில் இருந்தனர்.
டோரன்ட்டோ நகர வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது இம்ரான் கான் வந்த விமானத்தின் என்ஜின் பகுதியில் தீடீரென கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்ட அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்த பின்னர் அங்கு இறக்கப்பட்ட விமானத்தில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, இன்றிரவு நியூயார்க் நகரில் தங்கும் இம்ரான் கான் நாளை பாகிஸ்தான் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சவுதி மன்னரின் தனி விமானத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றதாக முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இம்ரான் கான் இன்று நியூயார்க்கில் இருந்து இஸ்லாமாபாத் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முஹம்மது குரைஷி, உயரதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும் விமானத்தில் இருந்தனர்.
இதையடுத்து, நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்ட அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்த பின்னர் அங்கு இறக்கப்பட்ட விமானத்தில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, இன்றிரவு நியூயார்க் நகரில் தங்கும் இம்ரான் கான் நாளை பாகிஸ்தான் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X