என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடுப்பூசி ஹீரோ விருது - ஷேக் ஹசினாவுக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டது
Byமாலை மலர்24 Sep 2019 12:08 PM GMT (Updated: 24 Sep 2019 12:08 PM GMT)
வங்காளதேசத்தில் போலியோ, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 'தடுப்பூசி ஹீரோ’ விருது அளிக்கப்பட்டது.
நியூயார்க்:
உலகளாவிய அளவில் பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி முகாம்கள் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கத்தை ’காவி’ (Global Alliance for Vaccination and Immunisations (GAVI)) என்னும் அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை 'காவி’ அமைப்பின் தலைவரான டாக்டர் ந்கோஸி ஒக்கோன்ஜோ-இவியா,
ஷேக் ஹசினாவுக்கு வழங்கி வாழ்த்து மடலை வாசித்தார்.
இந்த விருதுக்காக தன்னை தேர்வு செய்தமைக்காக நன்றி தெரிவித்த ஷேக் ஹசினா, மிகவும் சிறப்புக்குரிய இவ்விருதினை வங்காளதேசம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
உலகளாவிய அளவில் பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி முகாம்கள் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கத்தை ’காவி’ (Global Alliance for Vaccination and Immunisations (GAVI)) என்னும் அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது.
இந்த இயக்கத்தின் உதவியுடன் வங்காளதேசம் நாட்டில் போலியோ, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களை கட்டாய தடுப்பூசி திட்டம் மூலம் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 'தடுப்பூசி ஹீரோ’ விருது நேற்று வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை 'காவி’ அமைப்பின் தலைவரான டாக்டர் ந்கோஸி ஒக்கோன்ஜோ-இவியா,
ஷேக் ஹசினாவுக்கு வழங்கி வாழ்த்து மடலை வாசித்தார்.
இந்த விருதுக்காக தன்னை தேர்வு செய்தமைக்காக நன்றி தெரிவித்த ஷேக் ஹசினா, மிகவும் சிறப்புக்குரிய இவ்விருதினை வங்காளதேசம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
ஆரோக்கியமான மக்களால்தான் ஒரு நாட்டை வழிநடத்த முடியும் என்பதால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நோயற்ற சமுதாயம் அமைந்தாக வேண்டும்.
எனவே, சர்வதேச சுகாதார திட்டத்தின்கீழ் வரும் 2030-ம் ஆண்டுக்குள்நாட்டு மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு திறனுக்கான தடுப்பு முறைகளை பெற்றாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X