என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜீரியா: போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி
Byமாலை மலர்26 Aug 2019 12:32 PM GMT (Updated: 26 Aug 2019 12:32 PM GMT)
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
அபுஜா :
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொதுமக்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள ஹன்சாய் நகரின் கிராமம் ஒன்றுக்குள் திடீரென நுழைந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், அந்த கிரமத்தில் இருந்த வீடுகளுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் 12 பேரை கடத்திச்சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப்படையினர் கடத்தி செல்லப்பட்டர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X