என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்
Byமாலை மலர்24 Jun 2019 2:15 PM GMT (Updated: 24 Jun 2019 2:15 PM GMT)
ஜெர்மெனியில் 2 போர் விமானங்கள் பயிற்சியின் போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பெர்லின்:
ஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதின. மோதிய சில வினாடிகளில் விமானங்கள் கட்டுப்பாட்டினை இழந்து, மியூரிட்ஸ் ஏரி அருகில் விழுந்து நொறுங்கின.
ஆனால் விமானங்கள் தரையை நெருங்குவதற்குள், விமானங்களில் இருந்த இரண்டு விமானிகளும் 'பாராசூட்’ உதவியுடன் வெளியே குதித்தனர்.
இந்த விபத்தினை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு போர் விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், ஒரு விமானியை உயிருடன் மீட்டனர். மற்றொரு விமானியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X