என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![இலங்கையில் திரிகோணமலையில் நிலநடுக்கம் இலங்கையில் திரிகோணமலையில் நிலநடுக்கம்](https://img.maalaimalar.com/Articles/2018/Sep/201809151137038427_Sri-lanka-Trincomalee-earthquake_SECVPF.gif)
இலங்கையில் திரிகோணமலையில் நிலநடுக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொழும்பு:
இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவு 12.35 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
தொடக்கத்தில் மூதூரில் நிலநடுக்கம் உணரப் பட்டது. பின்னர் தோப்பூர், குச்சவெளி, தம்பல காமம் பகுதியில் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். நிலா வெளி, உவர்மலை, மனையா வெளி, வீர நகர், பிரதான வீதி, ஈச்சலம் பற்று, கட்டை பறிச்சான், திருக்கடலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.
நிலநடுக்கம் 2 முதல் 3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடலில் அலைகள் அதிகமானதால் தொடக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் விலக்கி கொள்ளப்பட்டது.
எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)